Saturday, 12 January 2013

என்.ஸி.டி.ஔவையார்..



அன்பிற்குரிய குழந்தைகளே...அச்சமின்றி பள்ளிக்கு வாருங்கள்.....
ஆரோக்கியமாய் வாழ்ந்திட ஆலோசனை கேளுங்கள்.............
இதய நலம் காத்திட உடறபயிற்சி செய்யுங்கள்...................
ஈகையுடன் வாழ்ந்திட உள்ளத்தை மகிழ்ச்சியாய் வைத்திருங்கள்.......
உண்ணும் உணவில் உப்பை அளவோடு சேருங்கள்............
ஊன்றுகோலாய் இருக்கிறோம் உறசாகமாய் வாழுங்கள்............
எடையை உயரத்திறகு ஏற்ப வைக்க முயற்சி செய்யுங்கள்..........
ஏகாந்தமாய வாழ்ந்திட பெறறோர்களே புகை மது தவிருங்கள்...
ஐயமின்றி கற்றிட மெர்குரி பள்ளிக்கு வாருங்கள்...........
ஒவ்வொரு குழந்தைகளும் சுகாதாரமாக இருங்கள்.....
ஓராண்டில் மாறிடும் ஒளிமயமான தமிழகம்.......
ஔவை சொன்னது பழமொழி......
இது மெர்குரி பள்ளியின் புதுமொழி.......



மாறுவேட போட்டியில் 
முதல்பரிசு பெற்ற மாணவி  த.ஜனப்பிரிய தர்ஷினி.
நான்காம் வகுப்பு.
மெர்குரி நர்சரி பிரைமரி பள்ளி
அரிமழம்,புதுக்கோட்டை மாவட்டம்.

Monday, 7 January 2013

தொற்றா நோய்கள் கண்டறிதல் விழிப்புணர்வு முகாம்

பாரதிதாசன் பல்கலை கழகத்தை சேர்ந்த நைனா முகமது கலைகல்லூரியின் சார்பில் அறந்தாங்கி,தொவன்காடு கிராமத்தில் மாணவர்கள் பங்கேற்ற தேசிய சமூக பணிகள் முகாம் நடைபெற்றது..அம்முகாமில் பங்கேற்ற தமிழ்நாடு சுகாதார மேம்பாட்டு திட்ட ஒருங்கிணைப்பாளர்மரு சுபாஷ் காந்தி தொற்றாநோய்கள் கண்டறிதலின் முக்கியத்துவம்,மற்றும் பயன்கள் குறித்து விளக்க உரை நிகழ்த்தினார்.அம்முகாமில் ஏராளமான பொதுமக்களும் பங்கேற்றனர் 



Tuesday, 1 January 2013

புத்தாண்டு வாழ்த்துக்கள்


இன்று புதிதாய் பிறந்தோம் 
இனிதாய் நலமாய் வாழ்ந்திடுவோம் 
2013 ஆம் ஆண்டினிலே 
12 மாதங்களும் மகிழ்ச்சி நிறைந்ததாய் 
53 வாரங்களும் வேடிக்கை நிறைந்ததாய் 
365 நாட்களும் வெற்றி நிறைந்ததாய் 
8760மணிகளும் ஆரோக்கியம் நிறைந்ததாய் 
525600நிமிடங்களும் அதிருஷ்டம் நிறைந்ததாய் 
31536000நொடிகளும்  நன்மை பயப்பதாய் 
2013ஆண்டே சாதனை படைக்கும் ஆண்டாய் 
விளங்கிட அனைவரையும் வாழ்த்துகிறோம் 

Sunday, 30 December 2012

மார்பகம் மற்றும் கருப்பை வாய் புற்றுநோய் விழிப்புணர்வு

தமிழ்நாடு சுகாதார மேம்பாட்டு திட்டத்தின் சார்பில் மகளிர் சுய உதவி குழுவினர் பங்கேற்ற மார்பகம் மற்றும் கருப்பை வாய் புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கம் ஏம்பல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 25.10.2012அன்று நடைபெற்றது.





Saturday, 29 December 2012

பயிற்சி முகாம்

தமிழக அரசு மருத்துவ மனைகளுக்கு தரச்சான்று பெறுவதற்கான நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக கதிரியல் நிபுனர்கள் மற்றும் நுன் கதிர் வீச்சாளர்களுக்கான மாநில அளவிலான பயிறசி முகாம் 10.12. 2012 அன்று புதுக்கோட்டை மாவட்ட தலைமை மருத்துவமனையில் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு மணோகரன்,இ.ஆ.ப அவர்கள் பயிற்சி முகாமை துவககி வைத்தார்.சுகாதாரப்பணிகள் இனை இயக்குநர் மரு. கரு.இராமநாதன் ,MD,அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.
தமிழ்நாடு சுகாதார திட்ட ஆலோசகர் மரு.இளங்கோ அவர்கள் முகாமை சிறப்புற நடத்திவைத்தார்.பல தலைப்புகளில் கருத்தாளர்கள் பயிற்சி வகுப்புகள் நடத்தினர்.
பயிற்சிமுகாமிற்கான ஏற்பாடுகளை மருத்துவமனை கண்காணிப்பாளர் 
மரு எழிலரசன்,MS,இருக்கை மருத்துவ அலுவலர் மரு உ.ரவிநாதன்,MS Ortho ,மரு சுபாஷ் காந்தி மற்றும் மருத்துவ அலுவலர்கள்,மருத்துவமனை பணியாளர்கள் சிறப்புற செய்திஉந்தனர்.




















மார்பகம் மற்றும் கருப்பை வாய் புற்றுநோய்விழிப்புணர்வு

மார்பகம் மற்றும் கருப்பை வாய் புற்றுநோய் விழிப்புணர்வு பிரச்சார இயக்கத்தின் தொடர்ச்சியாக கறபக விநாயகா செவிலியர் கல்லூரியில் 31.10.2012 அன்றுநடைபெற்ற நிகழ்ச்சி ....








Wednesday, 26 December 2012

வாழ்த்துகிறோம்



தமிழக அரசின் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியதற்காக 2012ஆம் ஆண்டிற்கான முதல் பரிசினை மான்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் ஜெ.ஜெயலலிதா அவர்களிடமிருந்து பெற்ற தமிழ்நாடு சுகாதார மேம்பாட்டு திட்ட இயக்குநர் திரு பங்கஜ் குமார் பன்சால் இ.ஆ.ப அவர்களை வாழ்த்தி மகிழ்கிறோம்.